Posts

Showing posts from September, 2026

சாத்தான்குளம் அருகே தலைமை ஆசிரியருக்கு மாநில நல்லாசிரியர் விருது

Image
  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஆர். எஸ்தர் மெர்சி, கல்வித் துறையில் ஆற்றிய சிறப்பான பணிகளைப் பாராட்டி நடப்பாண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.   மாநில அளவிலான இந்த உயரிய விருதைப் பெற்று திங்கட்கிழமை தனது பள்ளியான புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குத் திரும்பிய தலைமை ஆசிரியர் எஸ்தர் மெர்சிக்கு பள்ளி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தங்களது தலைமை ஆசிரியர் மாநில நல்லாசிரியர் விருது பெற்று பள்ளிக்குத் திரும்பியதை அறிந்த மாணவ, மாணவியர்கள் மகிழ்ச்சியுடன் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் அவரை வாழ்த்தி பாராட்டினர். தங்களது பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்ற இந்த உயரிய விருது, மாணவர்களிடைய...

சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர் கூடுகை

Image
 வரவேற்பும் வருகையும் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, சாலைப்புதூரில் அமைந்துள்ள ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில், 1995 முதல் 2001 வரை 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் கூடுகை விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை முதலே பள்ளி வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. மொத்தம் 74 முன்னாள் மாணவ, மாணவியர் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை மீண்டும் சந்தித்தது அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. தங்கள் ஆசிரியர்களைக் கண்டதும் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ஆசிரியர்கள் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையும் அன்பும் மீண்டும் ஒருமுறை அங்கு வெளிப்பட்டது. பாரம்பரிய உபசரிப்பும் 80's மற்றும் 90's கிட்ஸ் இனிப்புகளும் இந்த நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமான மற்றும் நினைவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்புப் பானம் வருகை தந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக பாரம்பரியமான பதநீர் மற்றும் நுங்கு வழங்கப்பட்டது. பழைய நினைவுகளைத் தூண்டும் பலகாரங்கள் 80's மற்றும் 90...