Posts

Showing posts from June, 2017

உள்ளாட்சி தேர்தல் நடபெறாத சோகம் ஆங்காங்கே தூக்கில் தொங்கும் மின்விளக்குகள்

Image

BIG NEWS :-மாற்றுத்திறனாளிகள் 50% மானிய விலையில் பெட்ரோல்/டீசல் பெறலாம்.

Image

THOOTHUKUDI : ADMISSION OPENS IN HOME SCIENCE COLLEGE

Image

கன்னியாகுமரி மாவட்டத்தில் B.Ed, special B.Ed படித்தவர்கள் CSI டயோஸீசில் பதிவு மூப்பு பட்டியலில் இடம்பெற பதிவு செய்ய அழைப்பு

Image

பேய்க்குளத்தில் மோட்டார் பழுதால் காட்சி பொருளான குடிநீர் தொட்டி 3 மாதங்களாக தொடரும் அவலம்

Image
சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தில் 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோட்டார் பழுது சரிசெய்யப்படாததால் இங்குள்ள குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறிவிட்டது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிப் படுகின்றனர். சாத்தான்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது பேய்க்குளம். இங்கு விஏஓ, ஆர்ஐ அலுவலகம் அருகே ஊராட்சி சார்பில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டது.   ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் இந்த தொட்டியில் ஏற்றப்பட்ட குடிநீர் அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்ததோடு அருகேயுள்ள அங்கன்வாடி மைய குடிநீர் தொட்டியில் ஏற்றப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இதனால் கிராம மக்கள் பயனடைந்து வந்தனர். இதனிடையே, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதில் இருந்த மின்மோட்டாரில் ஏற்பட்ட  பழுதால் தொட்டியில் குடிநீர் ஏற்றப்படுவது தடைபட்டது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை தகவல் தெரிவித்தும் பலனில்லை என...

ஆனந்தபுரத்தில் இலவச கண் லென்ஸ் பொருத்து முகாம்

Image

PAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.  மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இதே போன்று வங்கி கணக்குகள், கேஸ் இணைப்புகள் என அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது. எனவே, ஜூலை 1ம் தேதிக்கு பிறகு பான் எண்ணிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

M.Phil Admission Notification | Part Time /Full Time | Periyar University | Programe 2017 - 18

Image

ஜனவரி முதல் டிசம்பர் வரை புதிய நிதியாண்டு !!

2018 முதல் நிதியாண்டு மாறுகிறது. 150 ஆண்டு கால நடைமுறையில் மாற்றம் கொண்டு வருகிறது மத்திய அரசு.

பி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு

    பி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின.   அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,760 பி.ஆர்க்., இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.  இதற்காக, அண்ணா பல்கலை பேராசிரியர், இந்துமதியை உறுப்பினர் செயலராக கொண்ட, மாணவர் சேர்க்கை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இக்கமிட்டி, 'பி.ஆர்க்., இடங்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 25ல் துவங்கும்' என, அறிவித்தது. ஆனால், இதற்காக அறிவிக்கப்பட்ட, barch.tnea.ac.in என்ற இணையதளம், முதல் நாளே செயல்படவில்லை. மேலும், அட்மிஷன் குறித்த தகவல், அண்ணா பல்கலை மற்றும் தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி இணைய தளத்திலும் இடம் பெறவில்லை. எனவே, பி.ஆர்க்., விண்ணப்ப பதிவு அறிவிப்பு, பெரும்பாலான மாணவர்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலை இணையதளம் மற்றும் இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில், பி.ஆர்க்., பதிவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ப...

ITI கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு

     தமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள்,   கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார், ஐ.டி.ஐ., நிறுவனங்களில், 2017க்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 23ல் துவங்கியது.  கவுன்சிலிங் நடைபெறும் நாள், நேரம், இடம் குறித்த விபரம், விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டுள்ளது. தபால் மூலம், அழைப்பாணை அனுப்பப்படவில்லை. மேலும், கவுன்சிலிங் விபரங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலும் உள்ளன. எஸ்.எம்.எஸ்., தகவல் கிடைக்காதவர்கள், விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, கவுன்சிலிங் தேதி, இடம், நேரம் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017

         கடந்த இரு ஆண்டுகளாக புதியதலைமுறை குழுமம், தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ’புதுமைகள், கிராம சேவை, பழங்குடியினர் மேம்பாடு, பெண் கல்வி, செயலூக்கம், மொழித்திறன் மேம்பாடு, அறிவியல் விழிப்புணர்வு, படைப்பாற்றல், சிறப்புக்குழந்தைகள் என 9 பிரிவுகளில் ‘புதிய தலைமுறை ஆசிரியர் விருது’ வழங்கிவருகிறது. இந்த ஆண்டிற்கான ‘ஆசிரியர் விருது’ குறித்த அறிவிப்பு, இந்த வார புதியதலைமுறை கல்வி இதழில் வெளியாகியுள்ளது. திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள் மகிழ்வோடு விண்ணப்பிக்கலாம்… விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.07.2017. முழுவிவரங்கள் இந்தவார கல்வி இதழில்… (விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாய் நடைபெறும். இந்நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஒளிபரப்பாகும்…)

பி.இ., 2ம் ஆண்டு 30 -ல் கவுன்சிலிங் துவக்கம்

காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வரை நடக்கிறது. டிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்ப வினியோகம், மே 17-ல் துவங்கியது. ஜூன் 19,- வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 13 ஆயிரத்து, 69 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான கவுன்சிலிங் வரும், 30-ல் துவங்குகிறது. பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர், இளங்கோ கூறியதாவது: சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது. அன்றே லெதர் மற்றும் பிரின்டிங் பிரிவுக்கும், மறுநாள் கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும் நடக்கிறது. ஜூலை, 1 முதல் 3ம் தேதி வரை சிவில், 3 - 7ம் தேதி -வரை மெக்கானிக்கல், 7 - 10ம் தேதி வரை எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கும், 10ம் தேதி பி.எஸ்சி.,க்கும் நடக்கிறது. காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கவுன்சிலிங் நடக்கும் இடமான அழகப்பா இன்ஜி., கல்லுாரி வரை போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்ப...

பதநீருக்கு ஆசைப்பட்டு பைக்கை கோட்டை விட்டவர்

Image

பேய்க்குளம் லோக்கல் செய்தி

Image

தூத்துக்குடியில் அஞ்சலக ஏ.டி.எம் ஐ பயன்படுத்தி வங்கி ATM களில் பணம் எடுக்கும் வசதி

Image

திருச்செசந்தூர் அருகே கடலில் மூழ்கி நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக் மாணவர் உட்பட இருவர் பலி

திருச்செந்தூர் அருகே கடலில் மூழ்கி சுற்றுலா வந்த மாணவர்கள் இருவர் பலியாயினர்.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்தவர் ரிபாயத். இவரது குடும்பத்தினர் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக திருச்செந்தூரை அடுத்துள்ள சுற்றுலாமையமான மணப்பாடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிலர் கடலில் குளித்தனர். இதில்ஆழமான பகுதியில் 5 பேர் சிக்கிக்கொண்டனர். அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மூவரை மீட்டனர்.ரிபாயத்தின் மகன்கள் வர்ஷாஅகமது 17, ஷாலிக் 15 ஆகியோர் நீரில் மூழ்கினர்.அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செசல்லும் வழியில் பரிதாபமாகஇறந்தனர். வர்ஷா அகமது, நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் பயின்றுவந்தார்.ஷாலிக், காயல்பட்டணத்தில் பத்தாம் வகுப்பு பயின்றுவந்தார். ஒரே குடும்பத்தினர் இருவர் இறந்தசம்பவம் காயல்பட்டணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து குலசேகரபட்டணம்போலீசார் விசாரித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

சென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இதனை செயல்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அருகிலுள்ள மைதானத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டு உள்ளது.  இந்த புதிய வசதியை சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் 2 பைலட் 2 மருத்துவர்கள் இருப்பர். மற்ற ஹெலிகாப்டர்களை காட்டிலும் இது அதிக வேகத்துடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மூவைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை மற்றவருக்கு பொருத்துவதற்கு விரைந்து எடுத்துச்செல்ல இந்த ஹெலிகாப்டர் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏற்கனவே கோவையில் இவ்வகை ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி: பிளஸ் 2 தேறிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற பிளஸ் 2 தேறிய பெண்கள் விண்ணப் பிக்கலாம்.தற்போது பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.   ஆகவே, நீட் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை என மாணவ-மாணவிகள் கல்வி நிலையங்களில் அலை மோதி வருகின்றனர்.மேலும், தொழில் கல்விகளில் சேரவும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதில், செவிலியர் உதவி யாளர் பயிற்சியில் சேர மாணவிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக, உயர்கல்வி பயில வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளும், மருத்துவத்துறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்களும் இந்தப் பயிற்சியை தேர்ந்தெடுக்கின்றனர்.இந்நிலையில், ஜூலியன் பவுன்டேசன் அறக்கட்டளை, பாரத் சேவாசங்கம், தேசிய வளர்ச்சி முகமை ஆகியவை இணைந்து செவிலியர் உதவியாளர் பயிற்சித் திட்டத்தை சென்னையில் செயல்படுத்தி வருகின்றன.பெரம்பூர் ஜூலியன் மருத்துவமனை வளாகத்தில் செய்முறையுடன் கூடிய பயிற்சியாக இந்த செவிலியர் உதவியாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்...

தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!

2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள். 2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன. அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும். மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07...

விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!

தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இந்த யூபிஐ சேவையின் மூலமாக மொபைல் இயங்குதளத்தைப் பயன்படுத்தி உடனடியாக இரண்டு வங்கி கணக்கு இடையில் பணப் பரிமாற்ற செய்ய முடியும். எஸ்பிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத் தகவல் பரிமாற்ற செயலி நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இப்போது இந்தியாவில் பணப் பரிமாற்ற சேவையை அறிமுகப்படுத்துவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்திய தேசிய பரிவர்த்தனை கார்ப்ரேஷன் மற்றும் சில நிதி நிறுவனங்களுடன் வாட்ஸ்ஆப் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. எளிதான பணப் பரிமாற்ற சேவை 2016-ம் ஆண்டு முன்னால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அவர்களால் தேசிய பணப் பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான் யூபிஐ. இந்தச் செயலியின் உதவியுடன் எளிதாக இரண்டு வங்கி கணக்குடன் பணப் பரிமாற்ற செய்ய முடியும்.▪கணினிகல்வி▪ யூபிஐ செயலியை அனைத்து முக்கிய வங்கிகளும் தங்களது இணையதளச் செயலிகள் மட்டும் இல்...

அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி,  கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி ஆகியவைகளில் 3,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக, எஞ்சிய இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும், மத்திய கல்வி வாரிய திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களும் ஒதுக்கப்படும். 10 சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாநில திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 664 இடங்களும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு 119 இடங்களும்  ஒதுக்கீடு செய்யப்படும்.  ஒரு அரசு பல் மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் உள்ளன. 11 சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 610 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 7 சிறுபான்மை சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் 305 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ...

5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

        5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு  2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில் தகுதியானவர்களுக்கு தரவரிசை பட்டியல் மற்றும்  அவர்கள் பெற்ற கட்– ஆப் மதிப்பெண் ஆகியவை இன்று  (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு இணையதளத்தில் http://tndalu.ac.in/ranklist2017-18.php  வெளியிடப்பட்டது. இந்த தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர்  சட்டப்பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அசோக்குமார்  தெரிவித்தார்

உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?

அன்பு ஆசிரியர் தோழமைகளே! வணக்கம். அறிவியலில், ஆராய்ச்சித் துறையில் உங்கள் மாணவர்கள் சாதிக்க வேண்டுமா? உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா? உங்கள் பள்ளி குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் தெரிய வேண்டுமா? தினந்தோறும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? உங்கள் பள்ளி குழந்தைகள் அறிவியலில் கட்டுரைகளை எழுதினால் அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமா? அறிவியல் சார்ந்த பதிவுகளை படித்து அதில் உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டுமா? இயற்பியல், வேதியியல் உயிரியல், கணிதம் என எந்த பாடமானாலும் வல்லுநர்களோடு நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு… எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவியல் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக வர ..இன்னும் ..இன்னும் ..பல்வேறு வசதிகள் அனைத்தும் இலவசமாக… ஒரே தளத்தில்.. www.scienceindia.in     என்ற இணையதளத்தில் உங்கள் பள்ளியை பதிவு செய்யுங்கள்…. மேலும் தகவல்களுக்கு.. கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம் 9942467764,8778201926

MBBS Applications Sale Starts Tomorrow

 மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது: பிளஸ், 2 தேர்வு முடிவுகள், நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையில், வழிகாட்டு ஏடு மற்றும் விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும், 27ம் தேதி முதல் வினியோகிக்கப்படும். மாநிலத்தில் உள்ள, 22 அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூலை, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 8 மாலை 5:00 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். விண்ணப்ப படிவங்கள் பெற, 'செயலாளர், தேர்வு கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை' என்ற பெயரில், 500 ரூபாய்க்கான வரைவோலை (டி.டி.,) எடுக்க வேண்டும். சுயநிதி தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்பத்துக்கு, 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவசம்; மாணவர்கள் அதற்கான ஜாதி சான்று நகலை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளுக்கான விண்ணப்ப விபரங்கள் குறித்து விண்ணப்பத்தின் முகப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கு...

சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்

  சென்னை:'சிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு, ஜூன், 1ல் துவங்கியது; ஆக., 31 வரை விண்ணப்பிக்கலாம்.  உதவித்தொகை பெற, மத்திய, மாநில அரசு நடத்தும் தேர்வுகளில், குறைந்தபட்சம், 50 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மாணவர்கள், www.scholarships.gov.in என்ற இணையதளத்திலும், www.minorityaffairs.gov.in என்ற இணையதள இணைப்பு மூலமும்விண்ணப்பிக்கலாம்.

அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை 🖥 உலகறியச் செய்திட.. SCERT தனி APP சேனல்

*அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின்🙋திறனை  உலகறியச் செய்திட.. *திறமையை ஊக்குவித்தல் என்பது உழைப்பிற்கு வழங்கப்படும் உண்மையான விருது 👨‍🎓🎓🃏என்பதில் என்றும் நம்பிக்கை கொண்டு.. *பாடுவதில்* 🎤ஆர்வம் மற்றும் திறமை 🎼கொண்ட நமது ஆசிரியர்களின் திறமைகளை அனைவரும் 👪அறிந்து கொள்ளும் வண்ணமும் மற்றும் பிறரும் பயன் பயன்படுத்தும் விதமாகவும் *6,04,019*பார்வைகளைப் பெற்றுள்ள நமது *SCERT TN CHANNEL*ல் TEACHER SUPER SINGERS என்ற playlist இணைக்கப்பட்டுள்ளது. கைப்பேசி செயலி 📱SMULE மூலமாகவோ அல்லது 🎧பிறவற்றின் மூலமாகவோ பயனுள்ள பாடல்களைப் 🎼🎼🎼🎼பாடுவோரின் பாடல்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படும். 📡📡📡 உங்களது திறமை அனைவரும் அறியவும் பிறரைச் சென்றடையவும் நல்வாய்ப்பினை உருவாக்கித் தருவதிலும் *scert tn channel* பெருமகிழ்ச்சி கொள்கிறது. *வலைதளத்தில் 🖥📡உங்கள் குரல்வளம் 🤷‍♀🎤ஒலிக்க்கும் தருணம் இது* 👍👍👍வாழ்த்துகள்👍👍👍 http://www.tnscert.org/

மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...

(1) (topics & lessons) பாட பொருள் தலைப்புகள் - வேறுபாடு இல்லை. (2) Book & Metetials type புத்தகவடிவமைப்பு:- NCERT - very Advanced SCERT - Oldest Method (3) Question & Exam method வினாத்தாள் அமைப்பு முறை :- NCERT - No blue print, பாடத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து எடுக்கப்படும். SCERT - blue print குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கேட்கப்படும். (5) ( content )பாடக்கருத்துகள்:- (NCERT - Application view only ) பயன்பாடு அடிப்படை மட்டுமே. SCERT - (Basic concept, and Application) அடிப்படை கருத்து, பயண்பாடு, மனப்பாடம் , புரிந்து கொண்டு படைப்பாற்றல் உருவாக்கும் திறன் என பலவகையான வாய்ப்புகள் உள்ளது... அதனால் தான் நம் மாணவர்கள் உலகம் முழுவதும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.. மருத்துவர்கள் அவசியமே. அதற்காக NCERT syllabus உயர்ந்தது போன்றும், நமது SCERT syllabus தரம் குறைந்தது போன்ற பிம்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது .. நமது வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கவும், நம் கலாச்சார பண்பாடுகளை நம் இளைய தலைமுறையினர் அறியவும் SCERT என்கிற நம் மாநில...

158 வகையான மீன் வளர்க்க தடை, கட்டுப்பாடுகள்

Image
அலங்கார மீன்களை வளர்க்கவும், காட்சிப்படுத்தவும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 158 வகையான மீன்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அலங்கார மீன் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பும், போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. இது மக்களின் உணவு பிரச்னையில் தலையிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாட்டிறைச்சி உண்போருக்கு எழுந்துள்ள இந்த பிரச்னை போல், நாளை மீன் சாப்பிடக்கூடாது என்றும் கூறுவார்கள் என்று தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்த நிலையில் அதன் தொடக்கமாக மத்திய அரசு 158 வகையான அலங்கார மீன்கள் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய அரசிதழில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்ற மீன்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் சுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்குகளை கொடுமைப்படுத்துதலை த...

படிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்

Image
நான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.110 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுத் தேன் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் தெரிவித்தார். ஈரோட்டில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஈரோட்டில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து பொறியி யல் கல்லூரியில் 1989 1993-ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவி யர்களின் 25-ம் ஆண்டு நிறைவு வெள்ளிவிழா நேற்று நடந்தது. விழாவில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயசந்திரன் பேசியதாவது: கடந்த 1989-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள் இந்த கல்லூரியில் சேர்ந்தேன். நான் விரும்பிய கல்லூரி கிடைக்காமல் சாலை மற்றும் போக்கு வரத்து கல்லூரியில் என் விருப்பத்துக்கு மாறாக என் பெற்றோர் சேர்த்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து நான் திரும்பி இந்த கல்லூரிக்கு முன்னாள் மாணவனாக வரும் போது, அன்றைய நாட்களில் நான்கண்ட கனவுகளில் சில வற்றை செயல்படுத்திட, இந்த கல்லூரி அடித்தளமிட்டுள்ளதை பெருமிதமாக கருதுகிறேன். என்னுடைய தந்தை நாமக்கல் லில் பாரத ஸ்டேட் வங்கியில் எனக்காக கல்விக் கட...

நாசரேத்தில் ஊருக்குள் டாஸ்மாக் கடை வைக்க மக்கள் எதிர்ப்பு, போராட்டம்

Image

அறிவியல் ரயில்ஆறுமுகநேரி வருகை

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும்அறிவியல் ரயில் மூன்று நாள்களுக்கு ஆறுமுகநேரி வருகிறது.2017 பிப்ரவரியில் டில்லியில் கிளம்பிய அறிவியல் ரயிலில், சர்வதேச அளவில் பருவ நிலைமாற்றங்கள் குறித்த அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ரயில் நிலையத்திற்கு வரும் 28ம் தேதி வருகிறது. 28, 29, 30 ஆகிய 3 நாட்களுக்கு காலை 10 மணியில் மாலை 5 மணி வரைஸ்டேஷனில் நிற்கிறது. மாணவ, மாணவிகள், ஆர்வலர்கள் இதனை கண்டுகளிக்கலாம். இதில் பருவநிலை மாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் விளைவுகள், வெப்பநிலை உயரக் காரணங்கள்,பருவநிலை வேறுபாடுகள், பருவநிலை மாற்றம், பேரிடர், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து அறிவியல் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஜூன் 29 ஆம் தேதி கவுன்சிலிங் துவக்கம்

Image

நீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

பள்ளிகளில் கற்பிக்கும் முறை சரியில்லாததால் நீட் தேர்வில் தமிழகம் பின்தங்கியது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நடந்தது.   இதில், தமிழகத்தில் இருந்து மட்டும் மாநிலப் பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டத்தில் படிக்கும் 88 ஆயிரத்து 478 மாணவர்கள் விண் ணப்பித்தனர். இதில் 95 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில், நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. ஆனால், தேர்வில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் தமிழக மாணவர்கள் ஒருவர்கூட இடம்பெறவில்லை. இது கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறிய தாவது: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன்:மத்திய, மாநில பாடத்திட்டங்கள் இடையே பெரிய வேறுபாடு இல்லை. இரண்டும் ஒன்றுதான். நமது மாநில பாடத் திட்டத்தில் கற்பிக்கும் முறையும், கற்கும் முறையும் சரியில்லை. பல பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில், அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்துவதே இல்லை. தேர்ச்சி சதவீதத்தை...

116 ரன்களுக்கு ஒரு விக்கெட், தவான் 63 அவுட்

Windies vs India, 2nd ODI - Live Cricket Score, Commentary Series: India tour of West Indies, 2017 Venue: Queen's Park Oval, Port of Spain, Trinidad Date & Time: Jun 25,  09:00 AM  LOCAL IND 116/1 (18.4 Ovs)   CRR:  6.21 (Match reduced to 43 overs per side due to rain delay) Ajinkya Rahane *47  Shikhar Dhawan st Shai Hope b A Nurse  63

ரூபாய் 451 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடங்கள் திறப்பு

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 பள்ளிகள் திறப்பு 24.06.17 நேற்று திறக்கப்பட்ட புதுக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி பெறுமானம் ரூபாய் 1 கோடியே 54 இலட்சம்

MBBS - SEATS AVAIL IN TAMIL NADU AND QUOTA DETAILS FOR STATE BOARD STUDENTS

Image

NEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்

நீட் தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவர் ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 260-ஆவது இடம் பெற்றுள்ளார். 2015-ஆம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வை முடித்த இவர், முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காததால், அதே ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தார். எனினும் முதலாமாண்டு முடித்ததும் பொறியியல் படிப்பைக் கைவிட்டு, நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த எனக்கு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி தேர்வெழுதுவதற்கு பயிற்சி மையத்தில் பெற்ற பயிற்சிதான் உதவியது என்றார். சென்னை மாணவர்: தமிழக அளவில் இரண்டாவது இடத்தை சென்னை மாணவர் கே.ஆதித்யா பிரணவ் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 648 மதிப்பெண்ணும், அகில இந்திய அளவில் 351-ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். தேர்வு முடிவு குறித்து அவர் கூறுகையில், ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவ நுழைவுத்தேர்வைக் காட்டிலும் நீட் தேர்வு எளிதாகவே இருந்தது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலானோர் தேர்வு எழுதியதால், என்னுடைய தரவர...

இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள், ஓவர் 29.3

Windies vs India,  1st ODI  - Live Cricket Score,  Commentary Series:  India tour of West Indies, 2017   Venue:  Queen's Park Oval, Port of Spain, Trinidad   Date & Time:  Jun 23,  09:00 AM  LOCAL 28 Ov IND 158/1 (29.3 Ovs)   CRR:  5.36 Windies opt to bowl Shikhar Dhawan  * 84 Ajinkya Rahane c Holder b Alzarri Joseph 62