Posts

Showing posts from July, 2017

நெல்லையில் மினி மாரத்தான் போட்டி : ஆகஸ்ட் 16,17 ல் நடக்கிறது

Image

நகர்ப்புற பாதுகாப்பு மண்டலமானது சிங்காநல்லூர் குளம்

Image

PG TEACHERS & P.E.T TEACHERS WANTED (PERMANENT)

Image

சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி குறைப்பு : பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விழுக்காடு, அரை விழுக்காடு குறைந்துள்ளது. 1 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கான வட்டியை 4 விழுக்காட்டில் இருந்து 3.5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்திருப்பவர்கள். தொடர்ந்து வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தி வந்த நிலையில் வட்டி விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சேமிப்பு கணக்கு வட்டி விகித குறைப்பை அடுத்து கடன்களுக்கான வட்டி விழுக்காடும் விரைவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டார்களிடம் உருவாகி உள்ளது. இதனால் பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை உயர ஆரம்பித்துள்ளது. சேமிப்பு கணக்குளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருப்பு வைத்திருப்பவர்களுக்கு 4 விழுக்காடு வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வட்டி குறைப்பு இன்றே அமல்படுத்தப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறி...

பிரதமரின் தேசிய திறன் மேம்பாடு திட்டத்தின் கீழ் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ‘இயற்கை வழிகாட்டி’ பயிற்சி

பிரதமர் நரேந்திர மோடி 2015-ல் தேசிய திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற் கென தனி அமைச்சகமும் உருவாக் கப்பட்டது. இதன் அடிப்படையில் பல மத்திய அமைச்சகங்கள் பல்வேறு சுய வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.  இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சோதனை அடிப்படையில் ஒரு வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பசுமை திறனாய்வு வளர்ச்சி நிகழ்வு' என்ற பெயரிலான அந்த திட்டத்தில் 'இயற்கை வழிகாட்டி (Nature's Guide' எனும் பயிற்சிப் பணிஉருவாக்கப்பட்டுள்ளது. 10 -ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியைமுடிப்பவர்கள் நம் நாட்டின் சுற்றுலா தலங்கள், வனம் மற்றும் வனவிலங்கு சரணலாயம் ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டி யாக பணியாற்ற முடியும். இந்திய விலங்கியல் ஆய்வகம் மற்றும் இந்திய தாவரவியல் ஆய்வகம் ஆகியவை சார்பில், 10 மாவட்டங்களில் மட்டும் முதற் கட்டமாக இது அறிமுகப்படுத்தப் பட உள்ளது. இதற்காக, டேராடூன், தென் சிக்கிம்,...

உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கலாம்: சென்னை பல்கலைக்கழகம் அனுமதி

உடனடி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை ஆக.4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு சென்னை பல் கலைக்கழகம் அனுமதி அளித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளங்கலை, முதுகலை படிப்பு கள், மற்றும் எம்பிஏ படிப்பில் இறுதி ஆண்டு இறுதி செமஸ்டரில் ஒரேயொரு பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010 முதல் உடனடி தேர்வை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மறுமதிப் பீடு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னரே உடனடி தேர்வு நடத்தப் படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மறு மதிப்பீடு முடிவுகள் வெளியிடப் பட்ட நிலையில், மறுநாள் (29-ம் தேதி) தகுதியுடைய மாணவர்களுக்கு உடனடி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் அநேகமாக ஆகஸ்டு 2-ம் தேதி வெளி யிடப்படலாம். எனவே, பட்டப் படிப்பில் உடனடி தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களைக் காலியிடங்கள் இருப்பின் முதுகலை படிப்பில் ஆகஸ்டு 4-ம் தேதி வரை சேர்த்துக்கொள்ள பல்கலைக்கழக துறைகளுக்கும், உறுப்பு க...

ஆதார் எண்ணை - பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஆக்ஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றுதான் (ஜூலை-31 )கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்த நிலையில் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வரி செல்லுத்துவோரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 5.-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பயனாளர்களுக்கு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்காக காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரி ஆணையமும் தெரிவித்துள்ளது.

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்த, தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பிற்காக போராடிய நயினார் குலசேகரன், 94, காலமானார்

Image
தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பிற்காக போராடிய நயினார் குலசேகரன், 94, காலமானார்.துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்தவர் நயினார் குலசேகரன்.இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு தாமிரபரணியை பாதுகாக்கவும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நலனுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார். தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக செயல்பட்டார். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் துாத்துக்குடி மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.நேற்று அவர் காலமானார். மனைவி வெள்ளையம்மாள் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவரது மகன் ராஜ்குமார், மகள்கள் செல்லக்கனி, செல்வக்குமாரி ஆகியோருடன் வசித்து வந்தார்.இறுதிசடங்கு நேற்று மாலை நட்டாத்தியில் நடந்தது. சர்வ கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

தண்ணீர் லாரி மோதியதில்பத்து மாடுகள் பலி: மக்கள் மறியல்

  ஸ்ரீவைகுண்டம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் பத்து மாடுகள் பலியாயின.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தொழிற்சாலைகளின் தேவைக்காக தாமிரபரணி ஆற்றிலும் ஆற்றுப்படுகைகளிலும் தினமும் நுாற்றுக்கணக்கான டீசல் டேங்கர் லாரிகள், தண்ணீர் டேங்கர் லாரிகளாக மாறி தண்ணீர்எடுத்துச்செல்கின்றன. நெல்லை-திருச்செந்துார் சாலையில் தினமும் விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் நடக்கின்றன. நேற்று பகல் 11 மணியளவில், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள தென்திருப்பேரையில் திருச்செந்துார் சாலையை கடந்த மாடுகள் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் பத்து மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின. லாரியும் நிலைகுலைந்து கவிழ்ந்தது. அந்த பகுதி மக்கள் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மாடுகள் இறப்பிற்காக அதன் உரிமையாளருக்கு நஷ்டஈடு பெற்றுத்தரப்படும் எனவும் தண்ணீர் திருடும் டேங்கர் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழியளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புரோ லீக் கபடி பாயிண்ட்ஸ் டேபிள் 2017

ZONE A Position Team Played Won Lost Points 1.  Puneri Paltan 1 1 0 5 2. Gujarat Fortunegiants 0 0 0 0 3. Haryana Steelers 0 0        0 0 4. Dabang Delhi 0 0 0 0 5. Jaipur Pink Panthers 0 0 0 0 6. U Mumba 1 0 1 0 ZONE B Position Team Played Won Lost Points 1. Telugu Titans 1 1 0 5 2. Patna Pirates 0 0 0 0 3. UP Yodha 0 0         0 0 4. Bengaluru Bulls 0 0 0 0 5. Bengal Warriors 0 0 0 0 6.  Tamil Thalaivas  1 0 1 0

சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் சாவு மற்றொரு மாணவர் படுகாயம்

Image
சாத்தான்குளம்,  சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐ.டி.ஐ. மாணவர்கள் சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரியைச் சேர்ந்தவர் நம்பி. விவசாயி. இவருடைய மகன் பரமசிவன் (வயது 20). சாத்தான்குளம் தவசியப்பபுரத்தைச் சேர்ந்தவர் பழனி. டிரைவர். இவருடைய மகன் ரமேஷ் (19). பரமசிவன், ரமேஷ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரத்தில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2–ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று காலையில் இவர்கள் 2 பேரும் வழக்கம்போல் ஒரு மோட்டார் சைக்கிளில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர். ரமேஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். மாணவர் சாவு சாத்தான்குளம்– நாசரேத் ரோட்டில் ஆறுகண் பாலத்தை கடந்து சென்றபோது, சாலையோரம் உள்ள தடுப்பு கல்லின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவாறு ரோட்டில் கிடந்தனர். அக்கம் பக்கத்தினர...

SSLC துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

http://dge.tn.nic.in/sslcprvf/

TNPSC : GROUP IIA HALL TICKET PUBLISHED

https://www.tnpsconline.com/TNPSCACGRP2ALive/FrmLogin102017.aspx

சென்னையில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் (443 காலி பணியிடங்கள்), குறு அங்கன்வாடி பணியாளர் (158 காலி பணியிடங்கள்), அங்கன்வாடி உதவியாளர் 643 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயது 25 முதல் 35 வயது வரையும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடத்துக்கு 20 வயது முதல் 40 வயதுடன் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.தகுதி வாய்ந்த உள்ளூர் மகளிர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உரிய விண்ணப்பங்களை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் இணையதளமான www.icds.tn.nic.in-ல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், அந்தந்த பகுதியில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள...

TRB - New Notification Published for Polytechnic Engineering Lectures Post Recruitment

The candidates applied pursuant to the notification dated 16.06.2017 need not submit their applications once again. Edit option is now available, after payment is made. https://trbonlineexams.in/polytechnic/

5 தாலுகாக்களுக்கு புதிய வட்டாட்சியர்கள் நெல்லை மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் மாற்றம்

நெல்லை மாவட்டத்தில் ஓராண்டு பணி முடித்த தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட தாசில்தார்கள் விவரம் வருமாறு (பழைய பணியிடம் அடைப்புக்குறிக்குள்): 1) ராஜேஸ்வரி - தாசில்தார், சேரன்மகாதேவி (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு 3, பாளை) 2) கணேசன் - தாசில்தார், நெல்லை (தனி தாசில்தார், ஆதிதிராவிடர் நலம், சங்கரன்கோவில்) 3) சாந்தி - தாசில்தார், சிவகிரி (சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், சிவகிரி) 4) செல்வகுமார் - தாசில்தார், செங்கோட்ைட (தனி தாசில்தார், நில எடுப்பு, நதிநீர் இணைப்பு திட்டம் அலகு2, நாங்குநேரி). 5) முருகன் - தாசில்தார், தென்காசி (தாசில்தார், சமூக பாதுகாப்பு திட்டம், சங்கரன்கோவில்) 6) அனிதா - சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், சிவகிரி (தாசில்தார், தென்காசி). 7) வெலன்சியா சில்வேரா - சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர், சப் கலெக்டர் அலுவலகம், சேரன்மகாதேவி (கண்காணிப்பாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம்) 8) திருநாவுக்கரசு - ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார், சங்கரன்கோவில் (தாசில்தார், சிவகி...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 600 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தவான் 190, புஜாரா 153, ரகானே 57, அஷ்வின் 47, ஹர்திக் 50, ஷமி 30 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் நுவன் பிரதீப் 6, லாகிரு குமாரா 3, ஹெராத் 1 விக்கெட் வீழ்த்தினர்.  அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தது.  மேத்யூஸ் 83 ரன் எடுத்து (130 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா சுழலில் கோஹ்லி வசம் பிடிபட்டார். ஒரு முனையில் தில்ருவன் உறுதியுடன் போராட, கேப்டன் ஹெராத் 9 ரன், பிரதீப் 10, குமாரா 2 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.  இலங்கை அணி 78.3 ஓவரில் 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தில்ருவன் 92 ரன் (132 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, ஷமி 2, உமேஷ், அஷ்வின், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்...

தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்

அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, அனைத்து தேர்வு முடிவுகளும், ஜூலை, 12ல் வெளியாகின. இதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மறுமதிப்பீடுக்கு நேற்று வரை விண்ணப்பிக்க அவகாசம் இருந்தது. இந்நிலையில் ஆக., 1 வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது.

COMPARISON BETWEEN வாட்ஸ்ஆப் AND மைக்ரோசாப்ட்டின் ' கைசாலா ஆப்

வாட்ஸ்ஆப் இல்லாத வசதி :  கைசாலா ஆப்பில் கொண்டு வரப்பட்டுள்ள சில வசதிகள் வாட்ஸ்ஆப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. வாட்ஸ்ஆப் குரூப்பில் அதிகபட்சமாக 256 நபர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஆனால் கைசாலா ஆப்சில் எத்தனை பேரை வேண்டுமானாலும் குரூப்பில் சேர்த்துக் கொள்ள முடியும். மேலும் கைசாலா ஆப்ஸ் மூலம் கருத்து கணிப்பு, ஆய்வுகள், டாக்குமென்ட்களை உருவாக்க முடியும். இதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்கள் குரூப்பில் சர்வே நடத்தி, தங்களுக்கு இருக்கும் வரவேற்பை தெரிந்து கொள்ளலாம். கைசாலா ஆப்ஸ் மூலம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான நபர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், அவர்களுக்கு வாய்ஸ் கால் செய்த பேசவும் முடியும். கைசாலா ஆப்ஸ் வைத்திருப்போர் வணிக வளாகம் ஒன்றிற்குள் நடந்து சென்றால், தானாகவே அந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட விபரங்களை பெற முடியும். புரோ கைசாலா என்ற மற்றோரு ஆப்ஸ் மாதத்திற்கு ரூ.130 என்ற கட்டணத்தில் தொழில்துறை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

(PERMANENT POST) TEACHERS WANTED

Image

பேய்க்குளம் - தூத்துக்குடி அரசு பேருந்து விடும் நாள் எந்நாள்?

Image
நம்ம ஊர் பேய்க்குளம் எவ்வளவோ வளர்ந்து விட்டது என்று நாம் நினைத்தாலும் அதற்குத் தடையாக இருப்பது நம் மாவட்ட தலைநகருக்கு பேய்க்குளத்தில் இருந்து எத்தனை அரசு பேருந்துகள் செல்கின்றன. கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் எடுக்க, வேலை வாய்ப்பு அலுவலகம், முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகம், ஆசிரியர் மீட்டிங்க் வைக்கும் இடம் தூத்துக்குடியில் உள்ள ஏதோ ஒரு (நகரத்திற்கு புறம்பே) கல்லூரியில் அல்லது கால்டுவெல் போன்ற பள்ளியில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தால் தேர்வு எழுத அனுமதிக்கும் இடம் தூத்துக்குடி ஊருக்குள் உள்ள பள்ளிகள் தான், தொழிற்சாலைகள், கல்லூரிகள் (மதர் தெரிசா, ஹோலி கிராஸ், வ.உ.சி,அன்னம்மாள்,காமராஜ் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவைகளுக்கு எல்லாம் சரியான நேரத்தில் (மாவட்ட தலைநகரான தூத்துக்குடிக்கு) செல்ல நம் ஊரில் இருந்து எத்தனை அரசு பேருந்துகள் உள்ளன. அந்த நேரத்திற்கு செல்ல எடுக்கப்படும் பேருந்துகளும் தூத்துக்குடியில் கொண்டு சென்று விடுவது 9.20க்குத் தான். அதன் பிறகு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இன்னுமொரு பேருந்தை போராடிக் கண்டு செல்வதற்குள் 10 மணியைத் தாண்ட...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்வித்தகுதியில் மாற்றம்:உயர்கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உத்தரவு.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கான கல்வித் தகுதியில் மாற்றம் செய்து உயர்கல்வித் துறைசெயலர் சுனில் பாலிவால் புதிய உத்தரவை  அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடப்பிரிவுகளில் (கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம்) 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம்அண்மையில் ஓர் அறிவிப்பு வெளி யிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பிரிவு விரிவுரையாளர் பணிக்கு சம்பந்தப்பட்ட பொறி யியல் பாடத்தில் முதல் வகுப்பு பட்டமும் பொறியியல் அல்லாத பிரிவு எனில், குறிப் பிட்ட பாடப்பிரிவில் முதுகலை படிப்பில் முதல் வகுப்பு பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.இந்த நிலையில், பொறியியல் விரிவுரையாளர் தேர்வுக்கு முதல் வகுப்பில் இளங்கலை பட்டம்பெறாத பட்சத்தில் முதுகலை படிப்பில் (எம்இ, எம்டெக்) முதல் வகுப்பு பெற்றிருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர் ஆவர். ஆனால், அதற்கான வாய்ப்பு விண்ணப்பத்தில் இல்லாததால் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்துசெய்ய வேண...

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 700 டெக்னிக்கல் உதவியாளர், கள உதவியாளர்கள் வேலை

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 300 டெக்னிக்கல், மற்றும் எலக்ட்ரிக்கல், 400 கள உதவியாளர் (பயிற்சி) என 700 பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது. பணி: Technical  Assistants/Electrical காலியிடங்கள்: 300 பணி: Field Assistants(Trainee) காலியிடங்கள்: 400 நேரடி நியமனம்: மின்சார வாரியத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார்கள். அந்த வகையில், 700 பணியிடங்களும் நேரடி தேர்வு மூலம் நியமிக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு மட்டும் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இந்த பணியிடங்களுக்குரிய தேர்வுக்கான ...

ரூ.244க்கு அசத்தல் திட்டம் அறிவித்த வோடபோன்: முழு தகவல்கள்

     ரிலையன்ஸ் ஜியோவின் மேம்படுத்தப்பட்ட தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக வோடபோன் இந்தியா புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தியாவில் ரூ.244 என அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும்.  புதி திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி அளவு 3ஜி / 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் எண்களுக்கு மட்டும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை முதல் முறை ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும், இதனால் ஏற்கனவே வோடபோன் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை வேலை செய்யாது. முதல் முறை ரீசார்ஜ் செய்தபின் 70 நாட்களுக்கு வழங்கப்படும் இந்த சலுகை அடுத்த முறை ரீசார்ஜ் செய்தபின் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதேபோல் வோடபோன் ரூ.346 விலையில் திட்டத்தை வழங்குகிறது. இதில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 56 ஜிபி டேட்டா தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அனைத்து நெட்வொர்க்களுக்கும் வழங்கப்படுகிறது. எனினும் வாய்ஸ் கால்ஸ...

கிண்டி ITI-யில் சேர விண்ணப்பிக்கலாம்.

கிண்டி ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இரண்டாம் கட்டமாக வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாகவுள்ள தொழில்நுட்பப் பயிற்சிகளுக்கு www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். பெண்கள் 14 வயது முதல் வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் பயிற்சி காலத்தில் மாதந்தோறும் அரசு உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும். மேலும், அரசின் இலவச மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைபடக் கருவிகள், சீருடைகள், மிதிவண்டி, இலவச பஸ் பாஸ் ஆகியனவும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் பெற துணை இயக்குனர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ...

ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை

Image
தூய பனிமய மாதா திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தூத்துக்குடியில் 28 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Image

உலக கோப்பை பென்கள் இறுதிப்போட்டி : இந்தியாவுக்கு இலக்கு 229, India Women need 111 runs

ENGW 228/7 (50.0 Ovs) INDW 118/2 (29.3 Ovs)   CRR:  4   REQ:  5.41 India Women need 111 runs

BE - பொறியியல் தேர்வுகால அட்டவணை முன்கூட்டியே வெளியீடு - விடுமுறை நாட்களும் அறிவிப்பு.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 627 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கி வரு கின்றன. ஒவ்வொரு பருவகால தேர்வுகளும், ஒழுங்காகவும் மிகுந்த கவனத்தோடும் நடத்தப் பட்டு வருகின்றன. இனிவரும் காலங்களில் செய்முறைத் தேர்வுக்கும், எழுத்துத் தேர்வுக்கும் ஆண்டின் தொடக்கத்திலேயே கால அட்டவணை வெளியிடப் படும். இதனால், மாணவர்களின் மன அழுத்தம் குறைவதுடன் அவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாராக முடியும். நடப்பு பருவகால தேர்வுக் கால அட்டவணை: (ஜூலை- நவம்பர் 2017)1. இறுதித் தேர்வுகள் அட்ட வணை வெளியீடு - ஜூலை 24, கடைசி வேலை நாள் - அக்டோ பர் 21, செய்முறைத் தேர்வுகள் - அக்டோபர் 25 முதல் 28 வரை, இறுதித்தேர்வுகள் - அக்டோபர் 30 முதல் நவம்பர் 30 வரை, விடுமுறை - டிசம்பர் 17 வரை, அடுத்த பருவம் தொடங்கும் நாள் - டிசம்பர் 18, தேர்வுகளை டிசம்பர் 18-ம் தேதிக்குள் முடிப்பதால் மாணவர்களுக்கு 2 வாரம் முதல் 4 வாரங்கள் வரை குளிர்கால விடுமுறையும், 4 வாரம் முதல் 6 வாரம் வரை கோடைகால விட...

புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன. ஜியோ 4ஜி மொபைல் போன் ரூ.0 விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இதனை வாங்க 1,500 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் தொகை 3 ஆண்டுகளில் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜியோ 4ஜி மொபைல் போன் இலவசமாக கிடைக்க உள்ளது. இலவச ஜியோ 4ஜி மொபைலுக்கான புக்கிங் வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது விற்பனைக்கு வரலாம் என தெரிகிறது. இந்நிலையில் இந்த ஜீரோ காஸ்ட் போனில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது மற்ற பேசிக் மாடல் மொபைல்களில் இருப்பது போன்ற ஆங்கில எழுத்துக்கள் மற்றும் நம்பர்களுடன் கூடிய கீபேடை கொண்டுள்ளது இந்த ஜியோ போன். 2.4 இஞ்ச் க்யூவிஜிஏ டிஸ்பிளே மற்றும் எஃப்எம் ரேடியோவை இந்த போன்கள் கொண்டுள்ளன. மேலும் டார்ச் லைட் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெட்ஃபோன் ஜாக் வழங்கப்படும் என்றும் மெமரி கார்டு போடுவதற்கான ஸ்...