Posts

Showing posts from May, 2017

BUSINESS TRICKS

தொழில்முனைவோர் அறிந்த விஷயம்தான் இது. பணியாளர்களைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டால் தொழில் வளராது என்பது. ஆனால் இதை அறிவு பூர்வமாகப் பார்க்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக உணர்வதில்லை. வேலைக்கு இருப்பவர்களை நாம் எப்படி நோக்குகிறோமோ, அவர்கள் காலப்போக்கில் அதுவாகவே மாறிவிடுவார்கள்.  வேலைகளில் ஏற்றத்தாழ்வு பார்ப்பதும், வேலையை வைத்து ஒருவருக்கு மரியாதை தருவதும், தராமல் இருப்பதும், வேலை கொடுப்பவர் ஆண்டவன், வேலை பார்ப்பவர் அடிமை போன்ற எண்ணங்களினால்தான் பணியாளர் பங்களிப்பில் பெரும் பங்கம் வருகிறது.  ஆளுமை வளர்ச்சிக்கு என்ன செய்கிறோம்? எனக்குத் தெரிந்து பலருக்குத் தங்களிடம் வேலை செய்பவர்கள் ஒரு நல்ல சட்டை போட்டாலோ, நல்ல வண்டி வைத்திருந்தாலோ, சற்று நவ நாகரிகமாக இருந்தாலோ பிடிக்காது. தங்களைவிடத் தங்கள் பணியாளர்கள் குறைவாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை வளர்க்க விடாமல் தடுக்கிறது.  பெரிய நிறுவனங்கள்கூடத் திறன் சார்ந்த அடிப்படைப் பயிற்சி தவிர ஆளுமை வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் சிறு நிறுவனங்களிலும், ஸ்டார்ட் அப் போன்ற அமைப்பு...

ராஜராஜன் பற்றிய பிழை: பிளஸ் 1 பாடத்தில் மாறுமா?

       பிளஸ் 1 தமிழ் பாட புத்தகத்தில், ராஜராஜ சோழன் பற்றிய தவறான தகவல், இந்த ஆண்டிலாவது திருத்தப்பட வேண்டும்' என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.         பிளஸ் 1 தமிழ் பாடப் புத்தகத்தில், ஏழாவது பாடமாக, தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய, 'கல்வெட்டுகள்' பாடம் உள்ளது.  அதில், தமிழில் கல்வெட்டுகள் தோன்றிய முறை, அவற்றின் உள்ளடக்கம், அவற்றை படியெடுத்து, பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதே பாடத்தில், மெய்கீர்த்தி தோன்றிய விதமும், அவற்றின் போக்கும் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதில், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 893 என உள்ளது. ஆனால், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 983 ஆகும். அதாவது, ஒரு நுாற்றாண்டு தவறாக அச்சிடப்பட்டு உள்ளது.  இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். அதே எண்ணிக்கையில், டி.என்.பி.எஸ்.சி.,...

ரத்தான DRIVING LICENSE புதுப்பிக்க என்ன வழி?

      விபத்து ஏற்படுத்திய டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தின் தகுதி இழப்பை ரத்து செய்ய, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை, அரசு தெளிவுபடுத்தி உள்ளது.          சாலை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின், ஓட்டுனர் உரிமத்தை, தகுதி இழப்பு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு, தகுதி இழப்பை ரத்து செய்ய, சில தெளிவுரைகளை வழங்கி உள்ளது...  விபத்து ஏற்படுத்திய டிரைவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில், இரண்டு நாட்கள், தன் சொந்த செலவில், புத்தாக்க பயிற்சி பெற வேண்டும். அதற்குரிய சான்றிழை பெற்று, உரிமம் வழங்கும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம், சமர்ப்பிக்க வேண்டும்  விபத்து ஏற்படுத்திய டிரைவர்கள், ஓட்டுனர் உரிமத்தை தகுதி இழப்பு செய்யும் முன், அரசு மருத்துவமனையில், உரிய அலுவலர் முன் ஆஜராகி, உடல் தகுதி குறித்த  மருத்துவ சான்றிதழைப் பெற்று, சமர்ப்பிக்கலாம்.

இனி எஸ்எம்எஸ் மூலமும் ஆதார் எண் - பான் எண்ணை இணைக்கலாம் !!

குறுஞ்செய்தி வாயிலாகவும் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். அதன்மூலம் இரு எண்களும் இணைக்கப்படும். இதுகுறித்த வழிமுறைகள் தேசிய நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளியாகியுள்ளன. இணைய வசதி அறிமுகம் முன்னதாக இணையத்தில் ஆதார் எண்ணையும் - பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்காக வருமான வரித்துறை சார்பாக https://incometaxindiaefiling.gov.in/என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தை தொடர்பு கொண்டு பயனாளர்கள் தங்கள் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் இணைத்துக் கொள்ள முடியும். ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில் பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளனர். வருமான வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். நிதி மசோதா 201...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்வு...டீசல் விலை லிட்டருக்கு 89 பைசா உயர்வு

Image

மகப்பேறு விடுப்பில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் கவனத்திற்கு!!

      மகப்பேறுவிடுப்பில் ஆணை பெற்றவர்கள் பணியில் சேராமல் விடுப்புடனே பணியில் இருந்து விடுவிக்கச் செய்து மகப்பேறு விடுப்பில் இருப்பதாக புதிய பணியிடத்தில் பணியில் சேராமல் தகவல் மட்டும் தெரிவித்து விட்டு மகப்பேறு முடிந்தவுடன் புதிய பணியிடத்தில் சேர்ந்து கொள்ளலாம்.பணியில் சேர்ந்து கையெழுத்து இட்டால் விடுப்பு இரத்து செய்யப்பட்டுவிடும்...புதிய பணியிடத்தில் பெயருக்கு நேராக மகப்பேறு விடுப்பு என குறிக்க வேண்டும்..

BREAKING NEWS : 2017 ஆம் ஆண்டுக்கான PAPER - II BT_Assist தேர்வு பட்டியல் டிஆர்பி இணையத்தில் வெளியீடு

http://www.padasalai.net/2017/05/breaking-news-2017-paper-ii-btassist.html

மரம் வளர்க்கும் அதிசயப் பறவை!

Image
படித்த ஒரு விஷயத்தை, பார்த்த ஒரு புதிய இடத்தை உங்களால் எத்தனை நாட்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியும்? எபிங்காஸ் என்ற ஓர் உளவியல் அறிஞர் இது பற்றி ஒரு சோதனையை நடத்தினார். இந்தச் சோதனைப்படி படித்து முடித்தபின் முதல் ஒரு மணி நேரத்தில் படித்ததில் பாதி மறந்து போய்விடுகிறது, ஒரு வாரத்தில் படித்ததில் ஐந்தில் நான்கு பங்கு மறந்து போய்விடுகிறது, ஒரு மாதத்துக்குப் பிறகு முழுவதுமாக மறந்து போய்விடுகிறது என்று கூறினார். ஆனால், ஒரு பறவை தான் சேகரித்த ஆயிரக்கணக்கான விதைகள் எங்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றன என்று ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறது. அந்தப் பறவையின் பெயர் ‘கிளார்க் நட்கிரேக்கர்’ (Clark’s Nutcracker). வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி மலைச் சரிவுகளிலும், மெக்சிகோ நாட்டின் சில பகுதிகளிலும் வாழக்கூடிய பறவை இது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் கிளைகளில் கூடு கட்டி வாழும் பறவை. வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் பெயரில் இதனை ‘கிளார்க் நட்கிரேக்கர்’ என்று அழைக்கிறார்கள். சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கிறார்கள். ...

இது ஜீன்ஸ் பேண்டின் கதை

Image
லெவி ஸ்ட்ராஸ் (1829 - 1902)    வல்லுநர் என்பவர் எல்லா பதில்களும் தெரிந்தவர், நீங்கள் சரியான கேள்விகளைக் கேட்டால். - லெவி ஸ்ட்ராஸ் உலகம் முழுக்க ஆறு முதல் அறுபது வயது வரை ஆண்களும், பெண்களும் விரும்பி அணியும் உடை ஜீன்ஸ். விண்ணுலகிலிருந்து இதைப் பார்க்கும் ஒருவர் பெருமைப்படுவார். அவர் 1873 இல் ஜீன்ஸ் பேன்ட்டை அறிமுகம் செய்த லெவி ஸ்ட்ராஸ்.  ஜெர்மனியில் யூத இனத்தைச் சேர்ந்த ஹிர்ஷ் என்பவர் உலர்ந்த பழங்கள், துணிகள் விற்பனை செய்து வந்தார். அவரது ஏழு குழந்தைகளில் லெவி கடைக்குட்டி. ஜெர்மனியில் யூதர்கள் மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இதனால், ஏராளமான யூதர்கள் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார்கள். ஹிர்ஷின் இரண்டு மகன்கள் அமெரிக்கா போனார்கள். குடும்ப பிசினஸான உலர்ந்த பழங்கள், துணிகள் விற்பனையைத் தொடங்கினார்கள்.  லெவியின் பதினேழாம் வயதில் அப்பா நோய் வாய்ப்பட்டு இறந்தார். லெவி, தன் அம்மா, இரண்டு அக்காள்களுடன் அமெரிக்கா வந்தார். அண்ணன்களின் பிசினஸில் சேர்ந்தார்.  இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் ஒரு பொருளாதார யுகம்...

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஇருப்பதாவது:–நிர்வாக கட்டிடம்சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் கட்டப்பட்ட நிர்வாகக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.தமிழ் மென்பொருள்தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக15 தமிழ் மென்பொருட்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. அவற்றில். ‘‘தமிழிணையம் ஒருங்குறி மாற்றி’’ மற்றும் ‘‘தமிழிணையம் ஒருங்குறி எழுத்துக்கள்’’ ஆகிய 2 தமிழ் மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்....

RTE: இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்

       இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.  இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஏப்., 18ல் துவங்கி, மே, 26ல் முடிந்தது.இன்று மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நாளை குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. குலுக்கலில் தேர்வான மாணவர்களின் பட்டியல், நாளை, சம்பந்தப்பட்ட பள்ளி களில் வெளியிடப்படும். அந்த மாணவர்களுக்கு, ஜூன், 5ல், 'அட்மிஷன்' நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

வருவாய் துறை பெயர் மாற்றம்

     தமிழக வருவாய் துறையின் பெயர், 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.     தமிழக அரசின் வருவாய் துறை, நில வரி வருவாய் வசூலிப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்தது.           2004 டிசம்பர், 26ல், சுனாமி தாக்கிய பின், பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குவதில், வருவாய் துறையினரின் பங்கு அதிகமானது.அதன்பின், வருவாய் துறை சார்பில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக, முதல்வர் உள்ளார். இந்த ஆணையம், பேரிடர் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்தது.பெரும்பாலான மாநிலங்களில், வருவாய் துறையானது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.அதேபோல், தமிழகத்திலும் வருவாய் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

IGNOU June 2017 exam Hall ticket published

Click Here - IGNOU Hall Ticket June-2017

தமிழில் உள்ள பெரும்பாலான புத்தகங்களுக்கு e-book download link.

https://drive.google.com/file/d/0BxQHYGA5s7XEdE5aWDQtZkZoekE/view

Admission Notification 2017-2018 for Tamilnadu Dr.Ambedkar Government Law Colleges

Image

How to know bank balance via SMS?

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். 🔴அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படுகின்றது. 🔴 இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 🔴தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 🔴கீழே கொடுக்கப் பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும், உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை SMS அனுப்பிவிடுவார்கள். 🔴உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும். 1. Axis bank------------------ 09225892258 2. Andra bank------------------ 09223011300 3. Allahabad bank-------------09224150150 4. Bank of baroda-------------09223011311 5. Bhartiya Mahila bank----- 09212438888 6. Dhanlaxmi bank----------- 08067747700 7. IDBI bank-------------------- 09212993399 8. Kotak Mahindra bank--- 18002740110 9. Syndicate bank----------...

கல்வி கடன் வேண்டுமா? 'பான் கார்டு' வாங்குங்க!

கல்வி கடன் பெற, 'பான் கார்டு' அவசியம்' என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  பிளஸ் 2 தேர்வு முடிந்து, உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்கள், கல்வி கடனுக்காக, வங்கிகளை அணுக துவங்கியுள்ளனர். அவ்வாறு அணுகுவோருக்கு, சில அடிப்படை விஷயங்கள் தெரிவதில்லை என, வங்கி அலுவலர்கள் கூறுகின்றனர். முக்கியமாக, மாணவர்கள், வருமான வரித்துறை வழங்கும் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். பெற்றோரின் பான் கார்டும் தேவை. பான் கார்டு இல்லாத பெற்றோர் மற்றும் மாணவர்கள், உடனடியாக அதற்கு விண்ணப்பித்தால், ஒரு மாதத்திற்குள் கிடைத்து விடும் என, ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விளையாட்டை பாடமாக சேர்க்க மத்திய அரசு முடிவு

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு டெல்லியில் கூறியதாவது: ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பள்ளிப் பாடத்தில் விளையாட்டு கல்வியைப் புகுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகள் மண்டல, மாநில மற்றும் தேசிய அளவில் அடுத்தடுத்துச் செல்ல பள்ளியில் இருந்தே குடும்பத்தின ரும், சமூகத்தினரும் அவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டு உடல் மற்றும் மன ரீதியாக மாற்றத்தைத் தருவதுடன், குழு மனப்பான் மையையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் கலாச்சார விளையாட்டான கபடி மற்றும் கோ கோ-வை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சியை பிரதமர்எடுத்து வருகிறார். இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

DEE - SG Teachers Revised Seniority List

திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளீயீடு-DEE- இடைநிலை ஆசிரியர்- மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பித்தவர்களின் திருத்திய முன்னுரிமை பட்டியம் வெளியீடு   SG Teacher District to District) Transfer Application - Seniority List - Seniority wise - REVISED   SG Teacher District to District) Transfer Application - Seniority List - District wise - REVISED

ஜூன் 28 முதல் 10ம் வகுப்பு துணைத்தேர்வு : அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு...

சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 28 முதல் ஜூலை 6-ம் தேதி வரை நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வுக்கு மே 31-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். பள்ளிகள், தேர்வு மையங்கள் மூலம் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும், தனியார் பிரவுசிங் செண்டர்கள் மூலம் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் (இடைநிலை ஆசிரியர்) மாவட்ட மாறுதலுக்கு காலிப்பணியிடம்

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம்(இடைநிலை ஆசிரியர்) மாவட்ட மாறுதலுக்கு காலிப்பணியிடம் 1.பந்தபனேந்தல் 2.குணங்குளம் 3.கீழக்காவனுர் 4.அனந்தனேந்தல்     இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதலுக்கு- கரூர்மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் 6 மட்டும் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில்- 3 1.கம்பளியம்பட்டி 2.பெரியமலையாண்டிபட்டி 3.K..ஓட்டப்பட்டி கடவூர் ஒன்றியத்தில் -3 1.வரவணை 2.வரவணை 3.நல்லமுத்துப்பாளையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடைநிலை ஆசிரியர் காலிப்பணி இடங்கள்

விளாத்திகுளம் ஒன்றியம். 1.வள்ளி நாயகபுரம். 2.கந்தசாமி புரம்.புதூர் ஒன்றியம். 3.முத்து சாமிபுரம். 4.அயன்கரிசல்குளம். 5.மெட்டில்பட்டி. 6.மேலப்பட்டி. 7.மணியக்கரன்பட்டி. 8.தவசிலிங்கபுரம். 9.எல்.வி.புரம். 10.மேலக்கல்லூரணி. 11.பி.ஜெகவீரபுரம். 12.கந்தசாமிபுரம். 13.சேர்வைகாரன்பட்டி 14.நூத்தலக்கரை. 15.லட்சுமிபுரம்.

12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு நாளை (28.05.2017)வெளியீடு.. கல்வி வாரியம் அறிவிப்பு

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு  நாளை மறுநாள் தேர்வு முடிவுகள்வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பிறப்பு, இறப்பு பதிவு சான்று : தமிழக அரசு புது உத்தரவு

'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, ஆர்.டி.ஓ.,க்களுக்கு, பிறப்பு, இறப்பு பதிவு செய்வது தொடர்பான, சிறப்பு பயிற்சி முகாம், வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் நடந்தது. இது குறித்து, பிறப்பு, இறப்பு கூடுதல் பதிவாளரும், பொது சுகாதாரத் துறை இணை இயக்குனருமான, ஈஸ்வரன் கூறியதாவது: பிறப்பு, இறப்பை ஓராண்டுக்கு மேல் பதிவு செய்யாமல் இருந்தால், நீதிமன்ற அனுமதி பெற்றே, பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி, நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை.  சம்பந்தப்பட்ட, ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம். அதை, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்த பின், ஆர்.டி.ஒ., பிறப்பு, இறப்பை பதிவு செய்து, சான்றிதழ் வழங்குவார்.இவ்வாறு அவர் கூறினார்

அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், 'கொளுத்தும் வெயில் காரணமாக, ஜூன் 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பஸ் பாசை பயன்படுத்துவதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. இந்நிலையில், இந்த கல்வியாண்டுக்கான பஸ் பாஸ், பள்ளிக்கூடம் திறந்த பின்தான் வழங்கப்படும்.வரும், 7ல் இருந்து பள்ளிக்கு செல்லவுள்ள மாணவர்கள், பழைய பாசில் செல்லலாமா என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர். இது குறித்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை, பழைய பாசில், வரும் ஜூலை மாதம் இறுதி வரை சென்று வரலாம்' என்றனர்.

சென்னை, மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர்கள் நியமனம்

      உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் அளித்த பேட்டி:துணைவேந்தர் நியமனத்திற்கு காலதாமதத்திற்கு பல்வேறு காரணம் உள்ளது.     துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதி, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி காலியாகும் 6 மாதத்திற்கு முன் தேர்வு பணி துவங்கும். இந்த குழு, துணைவேந்தர் நியமனத்திற்கான உரிய நபர்கள் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து, 4 மாதத்தில் பரிந்துரையை வழங்கும்.        இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்தில் தேர்வு செய்யப்படுவார். அண்ணா பல்கலைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை கவர்னர் நிராகரித்து விட்டார்.பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது.          விரைவில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்

12th Answer Script Xerox Copy will upload next week.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப் பித்துள்ளனர். அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத் தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளி யிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மதிப்பீடு ஆகியவற்றுக்கு மாண வர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் படி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான அடிப்படையான விடைத்தாள் நகல் பெறுவதற்கு விண்ணப்பிக்க மே 12 முதல் 15-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட் டது. இந்த நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு கால அவகாசம் மே 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 99 ஆயிரம் பேர் விண்ணப்பம் விடைத்தாள் நகல் கோரி 99 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களுக்கான விடைத்தாள் நகல் அடுத்த வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த இணையதளத் தில் இருந்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப் படும்.

SOME CLICKS FROM CHINNALAMPATTI 25TH CHURCH FESTIVAL

Image
சின்னாளம்பட்டி  ஆலயம் ஆலயத்தோடு ஒட்டியுள்ள அறையின் முன் உள்ள பலாமரம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடபெற்ற பாலாஜி சமுதாயக் கூடம்

பால்பாயிண்ட் பேனாவுக்கு விடை கொடுப்போம்!

Image
இது பால்பாயிண்ட் பேனா யுகம். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்துவதையே சவுகரியமாகக் கருதுகிறோம். ஃபவுண்டன் பேனாக்களில் இங்க் நிரப்பிப் பயன்படுத்துவது நேர விரயம் என நினைக்கிறோம். ஆனால் பிளாஸ்டிக்கினால் ஆன பால்பாய்ண்ட் பேனாக்கள் எத்தகைய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என யோசித்திருக்கிறோமா? கவனிக்கப்படாத பாதிப்பு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் குறித்து மக்கள் மத்தியில் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், அவற்றின் ஒரு பகுதியாவது மறுசுழற்சிக்குப் போகிறது. ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களைப் பொறுத்தவரை, உலோகத்தாலான பேனா முனை, மீதமுள்ள மை, பிளாஸ்டிக் பேனா பகுதி இவற்றையெல்லாம் பிரித்தெடுப்பது சிரமம் எனச் சொல்லி, மறுசுழற்சி பற்றி யோசிப்பதே இல்லை. இதனால் மை தீர்ந்த பிறகு அவற்றை அப்படியே தூக்கி எறிந்துவிடுகிறோம். “ஆனால், பால்பாயிண்ட் பேனாக்களால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகமானது. கேரளாவில் மட்டும் மாதந்தோறும் மூன்று கோடி பால்பாயிண்ட் பேனாக்கள் பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படுகின்றன” எனச் சுட்டிக்...

Teachers Wanted!

Image

இறைச்சிக்காக மாடுகள் விற்க நாடு முழுக்க தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வதை மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். கசாப்பு தொழிலுக்காக, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. இந்த விதிமுறை மூலம், நாடு முழுக்க மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் - பள்ளிகல்வித்துறை அறிவிப்பு - விரிவான தொகுப்பு....

  கோடை விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.        கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து, 10ம் வகுப்பு மற்றும் கீழ்வகுப்புகளுக்கான அனைத்து பொதுத் தேர்வுகளும் ஏப்ரல் மாத இறுதியில் நடந்து முடிந்தது.          பின்னர், மே 1ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை அறிவித்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கத்தரி வெயில் தாக்கத்தின் காரணமாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் 110 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளை ஜூன் 7  தேதி அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.        இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி அ...

தான் படித்த பல்கலைக்கழகத்தில் மார்க் நிகழ்த்திய உரையின் 10 அம்சங்கள்

Image
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக: 1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இப்பொழுது ஹார்வர்டில் பேச வந்திருக்கிறேன் என்றால் நிச்சயம் எதையோ நிகழ்த்தியிருக்கிறேன். 2. ஹார்வர்டின் ஆகச் சிறந்த நினைவு பிரிசில்லாவை (மனைவி) சந்தித்ததுதான். அப்போதுதான் என்னுடைய இணையதளமான ஃபேஸ்மாஷை நிறுவியிருந்தேன். ஆனால் நான் தோற்கப் போகிறேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். என் பெற்றோர் அங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். என் நண்பர்கள் என்னை ஒரு விழா...

IGNOU மாணவர் சேர்க்கை அறிவிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையான, இக்னோவில், மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, இக்னோ மண்டல இயக்குனர், எஸ்.கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்னோ பல்கலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள், பணியில் இருப்போர், இல்லத்தரசிகள் போன்றோர், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்.  சென்னை, நந்தனம் அண்ணா சாலையில், ஜி.ஆர்.காம்ப்ளக்ஸ், மூன்றாவது மாடியில் இயங்கும், இக்னோ மண்டல அலுவலகத்திலும், கல்வி மையங்களிலும் விண்ணப்பங்களை பெறலாம். www.onlineadmission.ignou.ac.in  இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். சி.ஏ., - ஐ.சி.டபிள்யு.ஏ., - ஏ.சி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, சிறப்பு பி.காம்., படிப்பும் நடத்தப்படுகிறது. இது குறித்த விபரங்களை, 044 - 2431 2766 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்'         இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.            அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு நேரம், மதிப்பெண் முறையிலும், மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.            இந்நிலையில், இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, 'ஆல் பாஸ்' வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.  'இந்த ஆண்டு, மார்ச்சில் தேர்வு எழுதிய, பிளஸ் 1 மாணவர்களில், யாராவது தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, துணைத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்' என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுதங்களுடன் 'செல்பி'யா... சிறை செல்வது நிச்சயம்!

     ஆயுதங்களுடன், 'செல்பி' எடுப்பவர்களும், அதுதொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவோரும், சிறைக்கு செல்ல நேரிடும்' என, உ.பி., கோர்ட் எச்சரித்துள்ளது. உ.பி., மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது; இங்குள்ள கவுதம புத்த நகர் மாவட்ட கோர்ட்டில், செல்பி தொடர்பான ஒரு வழக்கில், நீதிபதி, பி.எம்.சிங் உத்தரவிட்டதாவது: திருமண நிகழ்ச்சிகளில், துப்பாக்கி குண்டு முழங்க ஊர்வலம் நடத்துவதும், சமூக வலைதளங்களில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எடுக்கப்பட்ட செல்பி புகைப்படங்கள் வெளியிடுவதும் அதிகரித்துள்ளது.  எனவே, ஆயுதங்களுடன் செல்பி எடுப்பவர்களின் பட்டியலை தயாரிக்கும்படி, போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் மீது, அந்தந்த பகுதி போலீசார் நடவடிக்கை எடுப்பர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, சிறைக்கு அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

ஐடி ஊழியர்கள் மட்டுமல்ல.. அரசு ஊழியர்களும் பணிநீக்கம்.. மத்திய அரசின் திடீர் நடவடிக்கை..!

     இந்திய ஐடி நிறுவனங்களின் அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிரவைத்துள்ள நிலையில், அரசு பணியிடங்களில் ஜாலியாக ஒரு வேலையும் செய்யாத 129 அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வை அளித்து அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.       இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் உறுதிப்படுத்தினார். மத்திய அரசு பணியில் இருக்கும் ஊழியர்களைத் திறன்ஆய்வு செய்து மரகட்டையாக இருக்கும் ஊழியர்களை அரசுக்குத் தேவையில்லை என மத்திய அரசின் திடீர் நடவடிக்கையின் மூலம் கட்டாய ஓய்வை அளித்துள்ளது. இதன் படி கடந்த சில மாதங்களில் குரூப் ஏ பிரிவில் 30 பேரையும், குரூப் பி பிரிவில் 99 பேர் என மொத்தம் 129 மத்திய அரசு ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு என்ற பெயரில் பணியை விட்டு நீக்கியுள்ளது மத்திய அரசு.        இந்த அறிவிப்பை வெளியிடும் முன் மத்திய அரசு குரூப் ஏ பிரிவில் 24,000 ஊழியர்களையும், குரூப் பி பிரிவில் 42,251 ஊழியர்களின் செயல்திறனை ஆய்வு செய்து அதன் பின்னர...

அரசு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு. எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது

          அரசு வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.           எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம்.  ஜூன் 3 மற்றும் 4ந் தேதிகளில் - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ.தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 4ந் தேதி - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. மெயின் தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 4ந் தேதி - எஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு நடைபெறுகிறது ஜூன் 18ந் தேதி - யூபிஎஸ்சி சிவில் சர்விசஸ் முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 18ந் தேதி - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.  ஜூலை 2ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - உதவி வேளாண் அலுவலர் தேர்வு நடைபெறுகிறது. ஜூல...

உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்

           உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது           ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இடம் உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவர் தான் பயணம் செய்ய முடியாத சூழலில், அந்தப் பயணச்சீட்டைத் தன் தாய், தந்தை, உடன்பிறப்புகள், மகன், மகள், கணவன், மனைவி ஆகியோரின் பெயருக்கு மாற்றிக்கொண்டு அவர்களைப் பயணம் செய்ய வைக்கலாம்.           இதற்காக ஒருவர் யார் பெயருக்குப் பயணச்சீட்டை மாற்ற வேண்டுமோ? அவருடைய அடையாள அட்டையுடன் வண்டி புறப்படும் நேரத்துக்கு 24மணி நேரத்துக்கு முன் தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.              குறிப்பிட்ட பணிக்குச் செல்லும் அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள பிற அலுவலர்களுக்கு இவ்வாறு பயணச்சீட்டை மாற்றிக்கொள்ளலாம். ...

கொளுத்தும் வெயில் காரணமாக, வேலை உறுதியளிப்பு திட்ட பணி நேரத்தை மாற்றியமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

வெயில் எதிரொலி: பணி நேரம் மாற்றம்!        கொளுத்தும் வெயில் காரணமாக, வேலை உறுதியளிப்பு திட்ட பணி நேரத்தை மாற்றியமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.       கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சொந்த ஊரில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவும், தேசிய வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில், கிராமங்களில் உள்ள குளம், குட்டைகள் துார் எடுப்பதாக துவங்கிய பணி, பின், பொது இடங்களை சுத்தப்படுத்துவது, பண்ணைக்குட்டை அமைப்பது, சமுதாய கழிப்பிடம் என, மாற்று பணிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட வெயில் கொளுத்துவதால், காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை உள்ள வேலை நேரத்தை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, இனி வரும் நாட்களில், காலை, 8:00 மணிக்கு பணி துவங்குகிறது; மதியம், 12:00 மணி முதல், 2:00 மணி வரை, மதிய உணவு இடைவேளை; மதியம், 2:00 மணி முதல், 5:00 மணி வரை பணி வழங்க, தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த மாற்றம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ...

12th Special Exam June 2017 - Time Table

Image

PGTRB - தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

       தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:              தமிழகத்தில் காலியாக உள்ள 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9ம் தேதி தமிழக அரசு தேர்வு நடத்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. அதில், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு 3 சதவீதம் என்று அறிவித்துள்ளது.          மேலும், அதில், 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமே இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.              தமிழக அரசு அந்த சட்டத்தை மீறி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பத...