தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டியில் வெற்றிபெறலாம் வாங்க!
பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு அமைச்சகம், எரிபொருள் சேமிப்பு குறித்து தேசிய அளவிலான ஓவியம், கட்டுரை மற்றும் புதிர் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. மாணவர்கள் பள்ளி மூலமாகவோ அல்லது தனியாகவோ பதிவு செய்து கலந்து கொள்ளும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. `பள்ளி மாணவர்களுக்கான இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, சிங்கப்பூர் பயணம், லேப்டாப், டேப்லெட்கள், ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ் வழங்கப்படும்' என அறிவித்திருக்கிறது பெட்ரோலியப் பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு (Petroleum Conservation Research Association (PCRA)). கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் சீனியர் பிரிவில் கலந்துகொண்டு தேசிய அளவில் இரண்டாவது இடம்பிடித்தவர், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஜெயராஜேஷ் மெட்ரிக் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி எமோரா மெர்சி. 15,000 ரூபாயும் லேப்டாப்பும் பரிசாகப் பெற்றார். இவரிடம் இந்தப் போட்டி குறித்துப் பேசியபோது, ``பெட்ரோலைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த கருப்பொருளை மையமாகவைத்துச் செயல்பட வேண்டும். டிராஃபிக் சிக்னலில் காத்திருக்கும்போது வாகன இன்ஜ...