Menu

Thursday 13 July 2017

சென்னை ஜூலை 17-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் : அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு


சென்னை: ஜூலை 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. மேலும் பொறியியல் படிப்பில் சேர 1.47 லடசம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார். 

மேலும் 19-ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அடுத்தாண்டு முதல் இணையதளம் வழியாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment