Menu

Saturday 8 July 2017

‘ஆன்லைன்’ தேர்வு நடத்துவதால் இப்படி ஒரு லாபமா?

ஆன்லைன்’ தேர்வு நடத்தியதன் மூலம் 4 லட்சம் மரங்களை பாதுகாத்த ரயில்வே துறை

பணி நியமனம் செய்வதற்கு ஆன்லைனில் தேர்வுகளை நடத்தியதால், 4 லட்சம் மரங்கள் மற்றும் 319 கோடி தாள்களை ரயில்வே துறை பாதுகாத்துள்ளது.
ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் ஆட்களை நியமிக்க, தேர்வு முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் பல்வேறு மொழிகளில் கேள்வித்தாள்கள் அச்சிடப்பட்டன. அதற்காக கோடிக்கணக்கான தாள்கள் (பேப்பர்) பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்க தற்போது ‘ஆன்லைன்’ மூலம் தேர்வுகளை நடத்தி வருகிறது ரயில்வே. முதல் கட்ட தேர்வு, எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் தட்டச்சு தேர்வு என 3 கட்டங்களாக ஆன்லைனில் தேர்வு நடத்தப்படுகிறது.
உலகிலேயே மிகப்பெரிய அளவில், 14 ஆயிரம் பணியிடங்களுக்கு 351 மையங்களில் ஆன்லைன் தேர்வை ரயில்வே நடத்தியது. இதில் 92 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 2.73 லட்சம் பேர் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றனர். உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் அலுவலக பணிகளுக்காக அவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்லைனில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 4 லட்சம் மரங்கள் மற்றும் 319 கோடி ஏ4 தாள்களை ரயில்வே பாதுகாத்து சுற்றுச்சூழலுக்கு உதவி செய்துள்ளது.

No comments:

Post a Comment