Menu

Saturday 8 July 2017

ஜிஎஸ்டி சந்தேகம் போக்கும் புதிய மொபைல் ஆப்


ஜிஎஸ்டி வரி குறித்த குழப்பத்தை பொது மக்கள் புரிந்து கொள்ளும் விதமாக புதிய மொபைல் ஆப் ஒன்றை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமலானது. அன்று முதல் இன்று வரை வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஜிஎஸ்டி குறித்த  குழப்பங்களும் சந்தேகங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்திய அரசு ஜிஎஸ்டி குறித்து தினசரி செய்தி தாள்களில் அந்த அந்த மாநில மொழிகளில் பல்வேறு அறிவிப்புகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. இருந்தாலும் இன்னமும் ஜிஎஸ்டி குறித்த ஒரு தெளிவான புரிதல் பொதுமக்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஜிஎஸ்டிக்கான தனி டுவிட்டர் பக்கமும் தொடங்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டு வருகிறது. இதில்  முக்கியமானது எந்த எந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி என்ற குழப்பம்தான்.  

இந்நிலையில் மத்திய அரசு நேற்று புதிய மொபைல் (ஆப்)  செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜிஎஸ்டி ரேட்ஸ் ஃபைண்டர் (GST Rates Finder) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார். இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஜிஎஸ்டி வரி எந்த பொருள்களுக்கு எவ்வளவு சதவிகிதம் வரி என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய சுங்கத் துறை தலைவர் வனஜா சர்னா மற்றும் சந்தீப் ராவல் ஆகியோர் கொண்டு குழு இந்த செயலியினை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment