ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் வருடந்தோறும் ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடத்துவது வழக்கம். கடந்த வருடம் நடந்த தேர்விற்கான ரிசல்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் சாலைப்புதூர் ஏக இரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கர் த/பெ ராமலிங்கம் மற்றும் சுரேஷ் பிரவீன் த/பெ மரிய பிரபாகரன் இருவரும் தலா 79 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வருடந்தோறும் 12 ஆம் வகுப்பு படிக்கும் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment