Menu

Wednesday 19 July 2017

இன்றைய தினகரன் நாளிதழ் செய்தி : பேய்க்குளத்தில் திமுக செயல்வீரர் கூட்டம்


சாத்தான்குளம்: தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வரும் காலம் நெருங்கி விட்டது என பேய்க்குளத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில்  தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேய்க்குளத்தில் நடந்தது. ஒன்றிய அவைத்தலைவர் கோயில்ராஜ் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி நகரச் செயலாளர் முத்துராமலிங்கம், சக்திகனி சாமுவேல்ராஜ், சிவசுப்பிரமணியன், வெயிலுமுத்து, பாலச்சந்திரன், முத்துப்பாண்டி, ஜெரால்டு, தூண்டில்மாடன், அருள்ராஜ் முன்னிலை வகித்தனர். ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியச் செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘தற்போது தமிழகத்தில் முதலில் சட்டமன்ற தேர்தல் வருமா? அல்லது உள்ளாட்சி தேர்தல் வருமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 குறிப்பாக அவர்கள் விரும்பும் வகையில் விரைவில் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரும் காலம் நெருங்கிவிட்டது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மத்தியில் இருந்து பாஜ தான் நடத்தி வருகிறது. இனிவரும் காலத்தில் தேர்தல் களத்தை சந்திக்க திமுக தொண்டர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் வைகுண்டம் தொகுதியில் திமுக போட்டியிடும். கருத்து வேறுபாடுகளை மறந்து நாம் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மலர இப்போதே பாடுபட வேண்டும்’’ என்றார்.

 கூட்டத்தில் மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி  மாவட்ட அமைப்பாளர் பூபதி, மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகபெருமாள், மாவட்டப் பிரதிநிதி அலெக்ஸ் புருட்டோ, ஒன்றியச் செயலாளர்கள் நல்லமுத்து, நவீன்குமார், நாசரேத் நகரச் செயலாளர் ரவிசெல்வக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சொர்ணக்குமார் பேசினர். இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் ஞானஜேம்ஸ், தென்திருப்பேரை நகரச் செயலாளர் ராமஜெயம், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அணஸ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோதிடேவிட் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். வின்சென்ட்ராஜ் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment