Menu

Saturday 12 August 2017

சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 14ம் தேதி நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில்

நெல்லை:  சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 14ம் தேதி நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (எண்.82604) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 13 பெட்டிகளும், 2 லக்கேஜ் பெட்டிகளும் இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும்.
 
 இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து நெல்லைக்கு 12ம் தேதி சிறப்பு ரயில்(எண்.82605) இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு வந்து சேருகிறது. மறுமார்க்கமாக 15ம் தேதியன்று இந்த ரயில் (எண். 82606) நெல்லையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுதினம் காலை 4.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

No comments:

Post a Comment