Hi Readers

...... TOMORROW IS RL.....TRUST EXAM ANSWER KEY RELEASED......CSIR NET EXAM HALL TICKET CAN BE DOWNLOADED NOW....

Thursday, 17 August 2017

23ல் சட்ட படிப்பு கவுன்சிலிங்


         தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக் கல்லுாரிகள் உள்ளன.

           இவற்றில், ஐந்து ஆண்டு, பி.ஏ., - எல்.எல்.பி., ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 2 - 5 வரை நடந்தது.

               அதை தொடர்ந்து, இரண்டாவது தரவரிசை பட்டியலை, சட்டப் பல்கலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் உள்ள, 'கட் - ஆப்' மதிப்பெண்படி, தகுதியானவர்களுக்கு, வரும், 23, 24ல், கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; தபாலில் அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. தகுதி பெற்று, தபாலில் அழைப்பு வராதவர்கள், விண்ணப்பித்த ஆவணங்களுடன், பல்கலை அறிவித்துள்ள நாளில், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்' என, மாணவர் சேர்க்கை தலைவர் பாலாஜி தெரிவித்து உள்ளார். 'கட் - ஆப்' விபரங்களை, சட்டப் பல்கலையின், tndalu.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment