Menu

Monday 14 August 2017

படித்த வேலையில்லாத இளைஞர்கள் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய சேவை

படித்த வேலையில்லாத இளைஞர் கள் தொழில் தொடங்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய சேவை தொடங்கப்பட் டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்ட இணையதள சேவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கே.முத்து (பொறுப்பு) தெரிவித்ததாவது:
படித்த வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. விண்ணப்ப தாரர்கள் மாவட்ட தொழில் மையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இணையதள சேவையை தமிழக அரசு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. எனவே, தகுதியுள்ள நபர்கள் இனி www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
பின்னர், பதிவிறக்கம் செய்யப் பட்ட தங்களின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இரு தொகுப்பு கள் இணைத்து திருவள்ளூர் மாவட்ட தொழில் மையத்துக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர், அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழி லுக்கு ரூ.10 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ.1 லட்சமும், வங்கிகள் மூலமாக பெற்றுத் தரப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 35 வயதுக்குள் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிருக்கு வயது 45-க்குள்) உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகையில் 25 சத வீதம் அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை மானியம் வழங்கப் படும்.
மேலும், விவரங்கள் பெற திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை (தொலைபேசி எண். 044-27663796, 27666787) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முத்து தெரிவித்துள்ளார்.
உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.3 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ.1 லட்சமும் கடன் கிடைக்கும்.

No comments:

Post a Comment