Menu

Monday 14 August 2017

நெல்லையில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்கள் : தினம் தினம் விபத்துகள், தினமலர் செய்தி

திருநெல்வேலி:நெல்லை மாநகரத்தில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் வேலைசெய்யாததால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். திருநெல்வேலி மாநகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக மேலப்பாளையம்-குறிச்சியில்சிக்னல், ரிலையன்ஸ் பல்க், பாளை.,பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன் அண்ணாசிலை ஆகிய இடங்களில்போக்குவரத்து சிக்னல் செயல்படுகின்றன. இந்த சிக்னல்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக செயல்படாமல்பழுதடைந்துள்ளன. அங்கு சில நேரங்களில் போக்குவரத்து போலீசார் ஒழுங்கு செய்கிறார்கள்.அனேக நேரங்களில் வாகன ஓட்டிகள் சிக்னல்களை கடப்பதில் மிகுந்த சிரமப்படுகின்றனர்.போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும் கூட சிக்னல் பணியில் யாரும் ஈடுபடாமல்,ஹெல்மெட் அணியாதவர்களை தேடிப்பிடித்து வழக்குப்போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து விபத்துகளில் இறந்தவர்களின் பட்டியலை பெரியபோர்டாக தெருக்கு தெருவைக்கும் நெல்லை போக்குவரத்து போலீசார் சிக்னல்களில் பணி, குறிப்பாக காலை, மாலை பள்ளிநேரங்களிலாவது போக்குவரத்து விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபடவேண்டும் என்பதே நெல்லை மக்களின் கோரிக்கையாகும்.

No comments:

Post a Comment