Posts

6029 கணினி அலுவலர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அமைச்சர் தகவல்

 தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று  பேசியபோது:   தமிழகத்தில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே உதவி கல்வி அலுவலர்களுக்கு அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வெளிப்படையாக விரைவில் நடத்தப்படும். மேலும் கல்வி அலுவலர்களுக்குபுதிய வாகனங்கள் வழங்கப்படும். மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர்கள் சுலபமாக தெரிந்துகொள்ள ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.

DRIVING LICENSE காணாமல் இந்த இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டால், காவல்துறை இணையதளம் மூலம் விண்ணப்பித்து சான்றுபெறும் சேவை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, eservices.tnPolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்தில் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.‌

GST EFFECT ON COMMON MAN IN SATHANKULAM

Image
BILL OF SWEETS STALL

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் 1-21 வரை கால்நடைகளுக்கு வாய்நோய் தடுப்பூசி முகாம்

Image

சாத்தான்குளம் வட்டார கபடி வீரர்கள் தேர்வு

சாத்தான்குளம்:தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு aசெய்யும் நிகழ்ச்சி சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.  இதில் சாத்தான்குளம் யூனியன் அளவிலான கபடி அணி வீரர்களும், பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். தேர்வு செய்யும் பணியை மாவட்ட அமெச்சூர் கபடி கழக துணைத் தலைவர் மகாபால்துரை தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் அனைவரும் கபடி விளையாடினர். இதில் 14 கபடி அணி வீரர்கள் தேர்வு செய்தனர்.     வீரர்களை சாத்தான்குளம் வட்டார அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் சாமுவேல் பொன்னையா, முத்தரசன் ஆகியோர் தேர்வு செய்தனர்.    பொத்தகாலன்விளை உடற்கல்வி ஆசிரியர் நெல்சன் சத்தியராஜ், ஜெயபால், ஆண்ட்ரூஸ் அண்ணாதுரை, மாவட்ட காங்கிரஸ் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.    இதையடுத்து ஜூனியர் பிரிவு கபடி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வட்டார அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள் தெரிவ...

PAN எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு டிச.,31 வரை நீடிப்பு

டெல்லி: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான காலக்கெடு ஆகஸட் 31 அதாவது இன்று தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017- 18-ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும். ஆதார் - பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. www.incometax , indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் - பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம். பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும்.

நாளை முதல் ரேசன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் விநியோகம்

ரேசன் கடைகளில் நாளை முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அதாவது ஸ்மார்ட் கார்டு பெற்றவர்களுக்கு, கார்டு மூலமாகவே அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது குடும்ப அட்டை அச்சிடப்பட்டு மண்டல மற்றும் தாலுகா அலுவலகங்கள் மூலம், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஸ்மார்ட் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கம் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  நாளை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஸ்மார்ட் பெற்றவர்களுக்கு, அதன் மூலம் மட்டுமே...