Menu

Saturday 2 September 2017

அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!

      அரசு வழக்கறிஞராக பணியாற்ற, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து,  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
     இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுஉள்ள செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள சார்நிலை நீதிமன்றங்களில், பதவிக்கால முறையில், குற்றவியல் அல்லது உரிமையியல் அரசு வழக்கறிஞராக பணியாற்ற, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்களை, www.chennai.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 8ம் தேதிக்குள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment